close
Choose your channels

எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது.. அனுபமா பரமேஸ்வரன் அறிவிப்பால் திரையுலகில் பரபரப்பு..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’பிரேமம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அனுபமா பரமேஸ்வரன் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தனுஷ் நடித்த ’கொடி’ அதர்வா நடித்த ’தள்ளி போகாதே’ உள்பட ஒரு சில தமிழ்ப் படங்களிலும், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஜெயம் ரவியின் ’சைரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் பக்கத்திற்கு 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தனது கையில் பிளாஸ்டிக் கவரை மோதிரம் போல் கட்டிக் கொண்டு தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக காமெடி செய்துள்ளார். இந்த காமெடியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

அனுபமா பரமேஸ்வரனின் இந்த பதிவு முழுக்க முழுக்க காமெடி பதிவு என்றும் அவருக்கு இன்னும் நிச்சயதார்த்தம் ஆகவில்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.