உடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...? காரணம்  என்ன...?

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]


இந்த செய்தி சற்று வியப்பைத் தந்தாலும், யுனைடெட் கிங்டனின் இதுபோன்ற தகவல் வெளிவந்துள்ளது. ஒரு இளைஞன் தன் காதலியுடன் உடலுறவு கொள்கையில், அவன் ஆணுறுப்பு உடைந்த சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி சன் என்ற பத்திரிக்கையில் இது பற்றிய செய்திகள் வந்துள்ளது.

உடலுறவு கொள்கையில் ஆண்களுக்கு ஆண்குறி உண்மையில் உடைந்துவிடுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து மருத்துவம் கூறுவது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆண்குறியில் எலும்பு முறிவு ஏற்படுவதையே, ஆணுறுப்பு உடைவது என்று கூறப்படுகிறது.


ஆணுறுப்பு எலும்பு முறிவு.....!

சாதாரணமாக எலும்பு முறிவதில் இருந்து இது வேறுபடுகின்றது. காரணம் ஆணுறுப்பு பகுதியி எலும்பு இல்லாததால், இதை திசு முறிவு என்றும் கூறுகிறார்கள். ஆணுறுப்பின் தோல் பகுதிக்கு கீழே ரப்பர் போன்ற திசுக்கள் அடுக்கு உள்ளதால், இது துனிகா அல்புகினியா என்று கூறப்படுகிறது. இதுதான் உடலுறவு சமயத்தில் ஆணின் ஆணுறுப்பு அளவு அதிகரிக்க மற்றும் குறைய காரணமாக அமைகின்றது. சில சமயங்களில் சிறுநீர்க்குழாய் சிதைவடையவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து பிரச்சனைகள் உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.


ஆணுறுப்பு எலும்பு முறிவு (திசு முறிவின்) அறிகுறிகள் என்னென்ன....!

ஆணுறுப்பில் சத்தம் ஏற்படும்

விறைப்புத்தன்மை குறைந்துவிடும்

அந்த இடத்தில் கடுமையான வலி இருக்கும்

ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டால், அந்த இடம் அடர் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இருக்கும்.

திடீரென ரத்தப்போக்கு ஏற்படும்

சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் ஏற்படும்.


இதை கண்டறிவது எப்படி...!

சிறுநீர்க்குழாய் செயல்பாடு குறித்து கண்டறிய சிறுநீர் பரிசோதனையும், ஆணுறுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க சிறப்பு வகை எக்ஸ்ரே, ஆண்குறியில் அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ உள்ளிட்ட சோதனைகளை செய்து பார்க்கலாம்.

பின்குறிப்பு : இத்தகவல்கள் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக செய்தி வழியாக கூறப்பட்ட கருத்துக்கள் மட்டுமே, நீங்கள் சொந்த மருத்துவரை அணுகி இப்பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பது நல்லது.

More News

'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

பிரசன்னா-சினேகா நடிப்பில் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு'. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிய 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி! நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்!

கொஞ்சமாவது நன்றியோடு இருங்கள் என விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் பிரமுகர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்

தமிழ் திரையுலகின் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது 'எப்.ஐ.ஆர்' மற்றும் 'மோகன்தாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு

சமீபத்தில் நடிகை யாஷிகா, அவரது தோழி பவானி மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரிந்ததே.