close
Choose your channels

கைது செய்யப்படுகிறாரா மீராமிதுன்? ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு!

Thursday, September 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 3வது சீசன் போட்டியாளரும், சூப்பர் மாடலுமான மீராமிதுன், பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும்போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டார். சேரன் மீது அவர் கூறிய பொய்யான புகார் உள்பட அவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பார்வையாளர்கள் அவரை போட்டியில் இருந்து வெளியேற்றினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின்னரும் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்கள் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்வதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் கடந்த மே மாதம் மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒட்டுமொத்த மலையாள மக்கள் மனம் புண்படும் வகையில் தெரிவித்த ஒரு கருத்துக்காக கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் மீராமிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.