close
Choose your channels

பாண்டவர் அணி உடைகிறதா? நாசர் மனைவி டுவிட்டால் பரபரப்பு

Monday, March 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் அணி என்ற இரு அணிகள் மோதியது என்பதும் இந்த தேர்தல் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் விரைவில் புதிய தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாண்டவர் அணியில் விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோர் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது திடீரென விஷால் மற்றும் நாசர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நாசர் மனைவி கமீலா நாசர் பதிவுசெய்த டுவிட்டில் ’தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் தற்போதைய செயல்கள் வருத்தமளிக்கும் வகையில் உள்ளதாகவும், ஒரு சிலருடன் மீண்டும் கைகோர்த்து செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன் என்றும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு உண்மையாக உழைப்பவர் பக்கமே நான் இருந்து செயல்படுவேன்' என்றும் கூறியுள்ளார்.

கமீலாநாசரின் இந்த ட்விட்டில் அவர் விஷாலின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர் விஷாலுக்கு எதிராக தான் இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷயத்தில் நாசருக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் எதிரொலியாக நடிகர் சங்கத்தில் உள்ள பாண்டவர் அணி உடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் பாண்டவர் அணி உடைந்தால் அதற்கு பதிலாக புதிய அணி ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.