ரஜினி அரசியலுக்கு வரவில்லையா? வைரலாகும் கடிதத்தால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, தான் உறுதியாக அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆன்மிக அரசியலை தொடங்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதமொன்று வைரலாகி வருகிறது. அதில் தான் அரசியலுக்கு வரவில்லை என்பது போல் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காரணத்தால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் தனக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தற்போதைக்கு அரசியல் வேண்டாம் என்று உடல்நலம் கருதி அறிவுறுத்தி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்போதைக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்பதுபோல் செய்திகள் ஊடகங்களில் பரவி வருகிறது.

ஆனால் இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது இந்த கடிதம் எதிர்க்கட்சியினரின் ஐடி விங் செய்த சதி என்றும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட போலியான கடிதம் இது என்றும் கூறி உள்ளனர்.

ஆனால் இது போலியான கடிதமாக இருந்தாலும் ரஜினி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு வரவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More News

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா???

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது எப்போது? முதலமைச்சர் விளக்கம் 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்! அதிர்ச்சி தகவல்

உக்ரைன் நாட்டில் சுறா மீன் தாக்கியதால் 12 வயது சிறுவன் கையை இழந்ததாகவும், கைடு ஒருவருக்கு கால் சேதமடைந்ததாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஷிவானிக்கு பதிலாக வைரலாகும் அவரது அம்மாவின் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன், நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து பேசாமல் மௌனமாக இருந்தார். அதன் பின்னர் இரண்டாவது வாரம் முதல் ரம்யா, கேப்ரில்லா, சம்யுக்தா

மிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் அய்யா தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார்.