உண்மையில் ஐஸ்வர்யாவை மக்கள் தான் காப்பாற்றினார்களா?

  • IndiaGlitz, [Sunday,September 09 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலில் இருந்த ஐஸ்வர்யா, மும்தாஜ், செண்ட்ராயன், விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த முடிவு குறித்து கமல் கூறுகையில் மக்களை குறை கூறினார்.

இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர் பார்ப்பதாகவும் ஆனால் டுவிட்டரில் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஓட்டு போடவில்லை என்றும் கமல் கூறினார். இதிலிருந்து கமல் ஒரு அரசியல்வாதிக்கு தேவையான அனைத்து தகுதியையும் பெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது. மேலும் கடந்த சீசனில் ஓவியாவுக்கு மட்டுமே ஒன்றரை கோடி ஓட்டு விழுந்ததாகவும், ஆனால் தற்போது மொத்தமே ஒன்றரை கோடி ஓட்டு கூட விழவில்லை என்றும் கூறினார். மேலும் கோடிக்கணக்கானோர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஓட்டு போட்டால்தான் தகுதியானவர்கள் வெற்றி பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

கமல் கூறியது ஓரளவு உண்மை. ஓட்டு குறைவாக விழுந்தது என்று அவர் கூறியது மட்டும் உண்மைதான். ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சீசனைவிட குறைவுதான். எனவேதான் ஓட்டுக்கள் குறைந்ததே தவிர, கமல் கூறியதை போல ஓட்டு போடாமல் யாரும் இல்லை

மேலும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார் என்பதை கூட மன வருத்தத்தோடு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நேற்று கமல் ஒரு கிராஃபை காண்பித்து ஐஸ்வர்யாவுக்குத்தான் அதிக ஓட்டுக்கள் விழுந்ததாக கூறியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் புலம்புகின்றனர். ஒரு சிறிய வித்தியாசத்தில் ஐஸ்வர்யா இந்த எவிக்சனில் இருந்து தப்பித்துவிட்டார் என்று கூறினால் கூட அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் மக்கள் விரோதத்தற்கு எதிராக மிக அதிக வாக்குகளை ஐஸ்வர்யா பெற்றார் என்ற ஒரு முடிவை அறிவித்ததை ஏற்று கொள்ள யாரும் தயாராக இல்லை என்பதே அனைவரும் கருத்தாக உள்ளது.

இதிலிருந்தே ஐஸ்வர்யாவை பிக்பாஸ் இறுதி வரை கொண்டு செல்வது உறுதியாகிவிட்டதோடு, அவர்தான் இந்த சீசனின் வின்னராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சமூக வலைத்தளங்களில் கமெண்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. கமல் கூறியபடி மக்களின் எண்ணங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அது உரிய நேரத்தில் தண்டிக்கப்படும் என்பதும் அதற்கு துணை போனவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை

More News

நயன்தாரா மகளாக நடித்த பிரபல காமெடி நடிகரின் மகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.

பிக்பாஸ் எவிக்சனில் எதிர்பாராத திருப்பம்: வெளியேறியது யார் தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மும்தாஜ், செண்ட்ராயன், ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாமர்த்தியமாக வாக்கு சேகரிக்கும் கமல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் விபத்து: ஒருவர் மரணம் அடைந்ததால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 80 நாட்களுக்கும் மேல் நடந்து வரும் நிலையில் இன்று ஏசி மெக்கானிக் ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'இந்தியன் 2' படத்தில் இணைந்த முக்கிய நடிகர்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து 22 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.