close
Choose your channels

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதா? மர்ம நபரின் பதிவால் பரபரப்பு!

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் பதிவு செய்ததால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 24 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவருடைய ஒவ்வொரு பதிவும் இலட்சக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பெறும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென சம்பந்தமில்லாத மர்ம நபர் ஒருவரின் புகைப்படம் மற்றும் பதிவு இருந்ததை பார்த்த ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கமெண்ட்ஸ் பகுதிகள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இதுகுறித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு தவறாக இடம்பெற்று விட்டது என்றும் தற்போது அது சரி செய்யப்பட்டது என்றும் மீண்டும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்தே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா சாகுந்தலம், யசோதா, குஷி ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.