கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஸ்ருதிஹாசன்? அவரே அளித்த பதில்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர மற்ற நடிகர் நடிகைகளின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வந்த தகவலின்படி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் ’அப்பா கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை’ என்று கூறினார். மேலும் ’தனது சகோதரி அக்சராஹாசன் படம் இயக்குவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவரது இயக்கத்தில் எனக்கு ஏற்ற கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

More News

கவின் நடித்த 'லிப்ட்' ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பாளர் விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய புகழடைந்த கவின் மற்றும் 'பிகில்' படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த திரைப்படம் 'லிப்ட்'. ஐடி அலுவலகம்

18 மாதக் குழந்தைக்கு கருப்பு பூஞ்சை தொற்று? அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது சற்று குறைந்து வருகிறது.

சூர்யா-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு செம குஷியான தகவல்!

சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த ஆந்தாலஜி திரைப்படமான 'நவரசா' ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து சூர்யா, விஜய் சேதுபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்

தமிழக மாணவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்- பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக

தனிஉரிமையே பறிபோகும்? இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி வழக்கு!

மத்திய அரசின் சட்டவிதிகள் பயனாளிகளின் (அதாவது இந்திய மக்களின்) தனி உரிமையை பாதிக்கும் விதமாக