close
Choose your channels

எஸ்பிபி சரணை திருமணம் செய்கிறாரா சோனியா அகர்வால்: வைரல் புகைப்படம்

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபியின் மகனுமான எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் கேப்ஷனாக ’புதியது ஒன்று உருவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து எஸ்பிபி சரண் மற்றும் சோனியா அகர்வால் ஆகிய இருவரும் திருமணம் செய்யப்போவதாக ஊகித்துக் கொண்ட நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

ஆனால் உண்மையில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடிக்கும் வெப்சீரீஸ் தொடக்கவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்று எஸ்பிபி சரண் பதிவு செய்துள்ள ஹேஷ்டேக்கில் இருந்து தெரிய வருகிறது.

நடிகை சோனியா அகர்வால் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு அதன் பின் 2010ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அதுமுதல் அவர் தனது நடிப்பு தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.