மிரட்டப்பட்டாரா சுரேஷ் சக்கரவர்த்தி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி இறுதிப் போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நான்காவது வாரம் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் உள்ளே நுழைந்தபோது சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் செல்வதில் சிக்கல் இருந்ததாகவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது

இருப்பினும் கடைசி ஒரு சில மணி நேரங்கள் இருக்கும்போது சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இறுதி போட்டி நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் அவர் உரையாடியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் சட்டம், ஒப்பந்தங்கள் ஆகியவை சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால் ’ஆண்டவர்’ போன்ற தூய்மையான ஆன்மாக்கள் இருப்பது நமக்கு நல்ல மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்

இதிலிருந்து அவர் ஒப்பந்தங்களை காட்டி மிரட்டப்பட்டாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வளவு வருத்தத்துடன் சுரேஷ் சக்கரவர்த்தி ட்வீட் பதிவு செய்ய என்ன காரணம்? என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் அவரை கேள்வி கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பாலாஜிக்கு எதிராக ஓட்டு போட சுசி கூறியதற்கு இதுதான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய இறுதி போட்டியில் ஆரி வின்னர் என்றும், பாலாஜி ரன்னர் என்றும் அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி அறிவிப்பு: கோப்பையை வழங்கினார் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஃபினாலே நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கிரேண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்காக ஸ்பெஷலாக

எவிக்ட் ஆன சோம், ரம்யாவுக்கு கொடுத்த ஆச்சரியமான கிஃப்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று நடைபெற்று வரும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் ஒருவர், சீசன் 3 வின்னர் முகினுடன் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

பிரபல நடிகை-அரசியல்வாதியுடன் லஞ்ச் சாப்பிட்ட விஜய்சேதுபதி: வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியுடன் நடிகர் விஜய் சேதுபதி லஞ்ச் சாப்பிட்டதாக பதிவு செய்யப்பட்ட டுவீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது 

பிக்பாஸ் வின்னர் இவர்தான்: முடிவு அறிவிக்கும் முன்னரே விக்கிபீடியாவில் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலே இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முடிவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்