வீடு தேடி வருகிறேன்: பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறிய இசைஞானி இளையராஜா அவர்கள், ரசிகர்களின் ஒவ்வொருவரின் வீட்டிற்கே வரவிருப்பதாக அறிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியதாவது.

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்த கொரோனா காலகட்டம் தடுக்கின்றது. இருந்தாலும் உங்கள் அன்பு உள்ளங்களை நான் மிகவும் நன்றாக அறிவேன். உங்களுடனேயே இசை வடிவில் நான் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனக்கும் நன்றாக தெரியும். எந்த நிமிடம் ஆனாலும் சரி எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் சரி என்னுடைய இசை உங்களுடனே தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இசை வடிவில் மட்டும் வந்தால் போதுமா? நான் நேரில் வர வேண்டாமா? உங்களிடத்திற்கு உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன் இசை ஓடிடி மூலமாக. இசை ஓடிடி என்பதை புதிதாக தொடங்கவிருக்கின்றேன் என்பதை இந்த பிறந்த நாளில் நான் சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த இசை ஓடிடியில் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்ற அரிய விஷயங்களையும், ஒவ்வொரு பாடலின்போது நிகழ்ந்த சுவாரஸ்மான சம்பவங்களையும், அதில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதையும் அதை பதிவு செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு உழைத்தோம் என்பது பற்றியும் நாங்கள் சொல்லவிருக்கின்றோம்.

இதுபோன்ற தகவல்களை நீங்கள் வேறு எந்த சேனல்களிலும் கேட்க முடியாத தகவல்களை தாங்கி வருகிறது இசை ஓடிடி. மேலும் உலக மாபெரும் இசை மேதைகள் தங்களுடைய அனுபவங்களின் மூலமாக அவர்கள் உணர்ந்ததும் என்னைப் பற்றி அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இதில் பங்கு பெற்று அவர்களும் அவர்களுடைய அனுபவங்களின் மூலமாக உங்களுக்கு சுவராஸ்யமான தகவல்களை அளிக்க காத்திருக்கின்றார்கள். இதெல்லாம் உங்கள் வீடு தேடி விரைவில் வருகிறது. இந்த இசை ஓடிடிக்காக காத்திருங்கள். காத்திருந்தாலும் அது வீண் போகாது என்பதை நான் இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இசைஞானி இளையராஜா அந்த வீடீயோவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

3வது நாளாக 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 25 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு

இன்று தமிழகத்தில் 1091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24586 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவுக்கு பலியான 9 மாத குழந்தையின் உடலை வாங்க மறுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது ஒன்பது மாத குழந்தை திடீரென உயிரிழந்ததை அடுத்து அந்த குழந்தையின் உடலை வாங்க அக்குழந்தையின் தந்தை மறுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக காண்டம் கொடுத்த அரசு: ஏன் தெரியுமா?

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அவர்களுக்கு அரசே இலவசமாக காண்டம்கள் கொடுத்து அனுப்பிய தகவல்

மணமகனுக்கு கொரோனா: கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது.

இன்னொரு பேரழிவு!!! அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி தகவல்!!!

வட இந்தியாவில் ஏற்பட்ட ஆம்பன் புயலின் தாக்கமே இன்னும் சரி செய்யப்படாத நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது