செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருக்கிறது: இசைஞானி இளையராஜா

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து இசைஞானி இளையராஜா கூறிய போது ’செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இரண்டு கட்டங்களாக இந்த கட்டிட திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கட்டிட திறப்பு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து இசைஞானி இளையராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ’பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார். ஒரு குடிமகனாகவும் எம்பியாகவும் இந்த புதிய கட்டிட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க துணை புரிந்த பிறகு மோடி மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகமே புதிய இந்தியாவை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்த புதிய கட்டிடம் திறக்க இருப்பதை நான் மனதார பாராட்டுகிறேன். பழங்கால தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பெருமை கொண்ட செங்கோலை அரச குடும்பத்தினர் வெற்றிகரமாக கையில் ஏந்தி ஆட்சி செய்தனர். நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக செங்கோலை போற்றினர். இத்தகைய செங்கோல் தற்போது சரியான இடத்திற்கு திரும்ப வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது’ என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

More News

பாராளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்: 'தமிழன்டா' ரஜினிகாந்த் ட்விட்..!

 டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஷங்கர் பட நாயகன்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்தில் ஷங்கர் படத்தில் நடித்து வரும் நாயகன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. மாஸ் தகவல்..!

கார்த்தி நடித்து வரும் 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது, உண்மையும் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது கதையில் உண்மையும் இருக்க வேண்டும் என உலகநாயகன் கமல்ஹாசன் 'தி கேரளா ஸ்டோரி' என்ற படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போ! கல்யாணமான பையனை லவ் பண்ணி இருக்க? தோழிகளை கலாய்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'தீராக்காதல்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பராக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து