எழுந்து வா பாலு, உனக்காக காத்திருக்கின்றேன்: இசைஞானியின் உருக்கமான வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், சரத்குமார், போனிகபூர் உள்ளிட பல்வேறு திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாலு எழுந்து வா! உனக்காக காத்து இருக்கின்றேன்’ என்று தொடங்கும் இளையராஜா அதன் பின்னர் ’நமது வாழ்வு வெறும் சினிமாவுடன் முடிந்து போவது அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் ஆரம்பித்து இசை நிகழ்ச்சியின் மூலம் நமது நட்பு அமைந்தது. இசைக் கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பு என்றும் பிரிந்ததே இல்லை.

எப்படி ஸ்வரங்கள் இசையை விட்டுப் பிரியாமல் இருக்கின்றதோ அது போல் நம் நட்பும் எந்த காலத்தில் பிரிந்ததில்லை. நாம் சண்டை போட்டாலும், சண்டை இல்லாத போதும், அது நட்பு என நீயும் அறிவாய் நானும் அறிவேன். நீ நிச்சயம் திரும்பி வருவாய் என என் உள்ளுணர்வு கூறுகிறது. அது நிஜமாகவே நடக்கட்டும் உனக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் எழுந்து வா என்று கூறியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

More News

மீண்டு வருவான், காத்திருக்கின்றேன்: எஸ்பிபி குறித்து பிரபல இயக்குனர்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்ட 22 பேருக்கு கொரோனா!!! அதிர்ச்சித் தகவல்!!!

ஆகஸ்ட் 7 ஆம் தேதி துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு 184 பயணிகளுடன் வந்த ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானது.

கள்ளக் காதலில் இருந்த மனைவியை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்த கணவர்: பரபரப்பு தகவல் 

வளர்ந்து வரும் டெக்னாலஜி மூலம் எதையும் கண்டு பிடித்துவிடலாம் என்ற நிலை இருக்கும் நிலையில் வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ

கடுமையான பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும் வெங்காயம்!!! திடுக்கிட வைக்கும் புதுத்தகவல்!!!

அமெரிக்காவிலும் கனடாவிலும் அந்நாட்டு காதாரத்துறை நிறுவனங்கள் மக்களிடையே தற்போது வெங்காயத்தைப் பற்றி கடுமையான