நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணியை எதிர்க்கும் வலுவான அணி!

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் மற்றும் பொருளாளர் பதவிக்கு கார்த்தி உள்பட ஏற்கனவே பதவியில் இருக்கும் நிர்வாகிகள் போட்டியிடவுள்ளனர்.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் இருவரும் போட்டியிட முடியாத நிலை உள்ளது. எனவே சரத்குமார் மனைவியும் நடிகையுமான ராதிகா தலைமையில் ஒரு அணி உருவாகும் என வதந்தி கிளம்பியது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி விஷாலின் பாண்டவர் அணியை பிரபல கல்வியாளரும் நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகியுமான ஐசரி கணேசன் தலைமையிலான ஒரு அணி எதிர்த்து களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பில் இருந்த விஷால் அணியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி வரும் ஐசரி கணேசன் தரப்பினர் தேர்தலுக்காக புதிய அணியை அமைக்கும் பணியில் இருப்பதாகவும், ஐசரி கணேசன் தலைமையிலான அணியில் நடிகர் உதயா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் நடிகர் சங்க பொறுப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இந்த அணி வலுவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

'களவாணி 2' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கிய 'களவாணி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 5.30 மணிக்கு அறிவிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

'2.0' சீன ரிலீஸ் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய ஆச்சரிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில்

அடிதடி ரகளை மூக்கில் ரத்தம்: நிச்சயதார்த்தம் ஆன நடிகர்-நடிகையின் பரிதாப நிலை!

நிச்சயதார்த்தம் முடிந்த நட்சத்திர ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் அடித்து ரகளை செய்ததால் காயம் ஏற்பட்டு தற்போது போலீஸ் கேஸ் ஆகியுள்ளது

'டிக்டாக்' வீடியோவால் சந்தேகம்: கல்லூரி பேராசிரியையை குத்தி கொலை செய்த கணவர்!

டிக்டாக் வீடியோவால் கல்லூரி பேராசிரியை ஒருவரை அவரது கணவரே குத்தி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் கோவை அருகே நடந்துள்ளது.

இனிமேல் பீரோவில் உள்ள பொருட்களை திருட முடியாது: கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

வெளியூர்களுக்கு செல்லும்போது பெரும்பாலானோர்களின் கவலை பீரோவில் வைத்துள்ள பணம், நகைகள் ஆகியவை நாம் திரும்பி வரும்வரை பத்திரமாக இருக்குமா?