close
Choose your channels

'கோமாளி' வெற்றியால் இயக்குனருக்கு கிடைத்த 'ஹோண்டாசிட்டி!

Saturday, September 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படம் நான்கு வாரங்கள் வசூல் மழை பொழிந்தது. இதனால் ஜெயம் ரவி உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த பரிசு வழங்கும் விழாவில் ஜெயம் ரவியும் கலந்து கொண்டு இயக்குனருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்தையே வெற்றிப்படமாக கொடுத்துள்ளதால் அடுத்தடுத்து அவருக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.