ஆர்ஜே அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இதற்கான விளம்பரங்களும் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியின் முதல்நாள் படப்பிடிப்பு நடந்ததாகவும் இதில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்ட ஆர்ஜே அர்ச்சனா மட்டும் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே அவர் பணி செய்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கு அனுமதி தரவில்லை என்றும் இதனை அடுத்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தப் பிரச்சினை காரணமாகவே அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் தான் பணிபுரியும் சேனலிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது

More News

ஒரு பைசா கூட காசு வாங்காமல் 75 ஆண்டுகளாக கல்வி கற்றுக்கொடுக்கும் முதியவர்!!!

பணமே வாங்காமல் தனது சொந்த கிராம மக்களுக்காக ஒடிசாவில் முதியவர் ஒருவர் 75 ஆண்டுகளாக,

சென்னையில் கொரோனா தனிமையில் இருந்தவரின் வீட்டில் 250 சரவன் தங்கம் கொள்ளை!!!

சென்னையில் திநகர் அடுத்த பாண்டிபஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் நூருல் ஹக்(71).

ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானிசங்கரின் காதலுக்கு வைக்கப்பட்ட டைட்டில்!

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் காதலித்து வருவது போன்ற புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பெரும் பரபரப்பை

இரட்டை அர்த்தத்தில் டைட்டில் வைத்த 'இருட்டு அறை' இயக்குனர்

'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையின் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்.

பிரகாஷ்ராஜூக்கு நன்றி கூறிய த்ரிஷா: ஏன் தெரியுமா?

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தனது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார் என்றும் இது குறித்த வீடியோ சமூக வளைதளத்தில்