விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி ஊழியர்கள். முழு விபரம்

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடம் நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு குழுவாக ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காப்பாற்ற திரையுலகம் உள்பட பல்வேறு துறையினர்களும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர்களின் அனுமதியுடன் ஐடி ஊழியர்களும் விவசாயிகளுக்காக களமிறங்க உள்ளனர். சென்னையை அடுத்த நாளை சோழிங்கநல்லூரில் ஐடி ஊழியர்களின் அமைதிப் போராட்டம் நாளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

சோழியங்கநல்லூர் ELCOT SEZ என்ற இடத்தில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழக மக்களே ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றது போல விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கும் ஐடிஊழியர்கள் ஆதரவு தருவது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

More News

ரஜினியின் '2.0' படத்தின் முக்கிய பணி முடிந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது...

விஜய்யின் அரசியல் பிரவேச வதந்தி குறித்து எஸ்.ஏ.சி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று ஒருபுறம் கடந்த பல ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இளையதளபதி விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது...

கமல் நண்பரின் இணையதளம் திடீர் முடக்கம். காரணம் என்ன?

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ஜெய்-அஞ்சலி காதல் திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடி போல் இன்னொரு நட்சத்திர ஜோடியான ஜெய்-அஞ்சலி உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த வதந்தியை இரு தரப்பினர்களும் மறுக்காததால் இதில் உண்மை இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஒருசிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்...