close
Choose your channels

தகுதி இல்லாதவர்களை கட்சியில் இருந்து நீக்குவது எனது கடமை: கமல்ஹாசன்

Saturday, April 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தகுதி இல்லாதவர்களை காட்சியிலிருந்து நீக்குவதை கடமையாக கருதுகிறேன் என்று கமல்ஹாசன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இன்று அது குறித்த சிறப்பு நிகழ்வு ஒன்றில் கமல்ஹாசன் பேசினார். ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்ற தலைப்பில் அவர் இணையவழி கருத்தரங்கில் பேசியபோது, பஞ்சாயத்துராஜ் குறித்த முக்கியத்துவத்தை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து அவர் பேசியபோது தகுதி இல்லாதவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கட்சியில் தலைவர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் அந்த தகுதிகள் இல்லாதவர்களை நீக்க வேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் அனைத்து விமர்சனங்களுக்கும் தயாராக உள்ளது என்றும் ஆட்சி என்பது கோட்டைக்குள் மட்டுமே செய்யும் விஷயம் அல்ல என்றும் அவர் பேசியுள்ளார். கமல் கட்சியில் இருந்து சமீபத்தில் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.