கொரோனா வைரஸால் கை விரல்கள் அழுகிய கொடூரம்…. இன்னும் சில பகீர் தகவல்கள்!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதயத்தில் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, ஏன் மூளையில் கூட பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு 3 கை விரல்கள் அழுகி கறுப்பு நிறமாக மாறிய கொடூரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இதனால் அந்த மூதாட்டியின் அழுகிய விரல்கள் தற்போது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து என்டா வாஸ்குலர் சர்ஜரி எனும் ஆய்விதழ் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அதில் 81 வயதான அந்த மூதாட்டிக்கு கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்றும் இந்நோய் எந்த அறிகுறியையும் ஏற்படுத்த வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மூதாட்டியின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதன் செயல்திறன் முற்றிலும் குறைந்து இருக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்ததின் அளவு குறைந்து மேலும் ரத்த உறைவு நோய் ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரத்தம் உறைவுக்கான மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்து உள்ளனர். ஆனால் வயது முதிர்வு காரணமாக இந்த மாத்திரைகள் அவருக்கு வேலை செய்யவில்லை என்றும் ரத்த உறைவின் உச்சப்பட்சமாக அவரின் கை விரல்கள் தற்போது அழுகிப் போய் இருக்கின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுபோன்ற ரத்த உறையும் அறிகுறி 30% பேருக்கு இருப்பதாக லண்டனை சேர்ந்த மருத்துவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதனால் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

5,000 ஆண்டு பழமையான மது ஆலை? அசந்துபோன ஆய்வாளர்கள்!

பழமைக்கும் விசித்திரத்துக்கும் பெயர்போன எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு! பரபரப்பு சம்பவம்!

இந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த யுவராஜ் சிங், தலித் சமூகத்தை அவமரியாதை செய்தார் என்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

கட்டணம் இல்லாத இலவச செல்போன் குறைதீர்ப்புத் திட்டம்… முதல்வரை பாராட்டும் சாமானிய மக்கள்!

1100  என்ற செல்போன் எண்ணைக் கொண்டு இனி இலவசமாக மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து சகாயம் ஐஏஎஸ் வெளியிட்ட அதிரடி கருத்து!

டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுமாறு தொடர்ந்து

'தர்பார்' பட நடிகைக்கு திருமணம்: ஒரு ஆண்டாக லிவிங் டுகெதரில் வாழ்ந்தவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது காதலருடன் லிவிங்டுகெதர்