15 வருடங்களுக்கு பின் மீண்டும் வில்லன்: ரஜினியின் தர்பாரில் பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,May 23 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி மீண்டும் மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரதீக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்த்ராஜ், உள்பட ஒருசில நடிகர்கள் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் மெயின் வில்லன் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஆம், பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி இந்த படத்தின் முக்கிய வில்லனாகிறார்.

'காலா' படத்தில் நானா படேகரும், '2.0' படத்தில் அக்சயகுமாரும் வில்லன்களாக நடித்த நிலையில் தற்போது 'தர்பார்' படத்தில் சுனில்ஷெட்டி வில்லனாகிறார். 15 ஆண்டுகளுக்கு முன் ஷாருக்கானின் Main Hoon Na' என்ற படத்தில் வில்லனாக நடித்த சுனில்ஷெட்டி அதன்பின் 'தலைவர்' படத்தில்தான் வில்லனாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சுனில்ஷெட்டி கலந்து கொள்வார் என்றும் ரஜினி, சுனில்ஷெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்போது படமாக்கபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது? காஜல் அகர்வால் தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில்

இயக்குனர் லோகேஷூக்கு 4 மாதங்கள் டைம் கொடுத்த விஜய்!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா!

நடிகை த்ரிஷாவை வெளிநாட்டு போலீசார் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் 'ராங்கி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காக சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கசடதபற' படத்தின் ஆறு ஒளிப்பதிவாளர்கள் இவர்கள் தான்

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு படத்தொகுப்பாளர்கள்

பிரதமர் மோடியின் தனி அமைச்சகம் திட்டம்: சரத்குமார் பேட்டி

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க தனி அமைச்சகம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக நடிகரும்