ஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா? வைரலாகும் அதிர்ச்சி பின்னணி!

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத நிலையில் தற்போது 15 ஆவது சீசன் தொடருக்கான லீக் போட்டிகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சிஎஸ்கேவிற்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று தனது பதவியில் இருந்து விலகி இருப்பதற்கு பல்வேறு அதிர்ச்சி காரணங்கள் கூறப்படுகின்றன.

சிஎஸ்கே அணி துவங்கப்பட்டதில் இருந்தே அந்த அணியின் கேப்டனாக தல தோனி இருந்து வந்தார். இந்நிலையில் 15 ஆவது சீசன் போட்டி துவங்குவதற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து ஜடேஜாவை கேப்டனாகக் கொண்ட சிஎஸ்கே இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இனிவரும் 6 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஜடேஜா திடீரென்று தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு ஜடேஜாவிற்கு ஏற்பட்டு இருக்கும் அழுத்தமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது போட்டியின் இக்கட்டான சூழ்நிலைகளில் தோனியே அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கை முடிவுசெய்கிறார். இதனால் ஜடேஜா சுதந்திரத் தன்மையுடன் செயல்பட முடிவதில்லை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

மேலும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஃபீல்டராக இருந்துவந்த ஜடேஜா கேப்டன் பதவிக்குப் பிறகு ஃபார்ம் அவுட்டாகிவிட்டார். ஃபீல்டிங்கிலும் கடுமையாகத் சொதப்புகிறார். இதையடுத்து கேப்டன் பதவியை விட்டு விலகுமாறு ரசிகர்களும் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். இதைத் தவிர்க்கத்தான் ஜடேஜா கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தனது விளையாட்டில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி மீண்டும் பதவியேற்றுள்ளார். இதனால் தோனி ஓய்விற்குப் பின் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

More News

மார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பிரபல நடிகை சென்றது எங்கே தெரியுமா? வைரல் வீடியோ

சமீபத்தில்  மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை ஒருவர்  அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சென்ற இடம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'தல' அஜித் பிறந்த நாளில் 'தல' தோனி எடுத்த அதிரடி முடிவு!

தல அஜித் பிறந்தநாள் தல தோனி எடுத்த அதிரடி முடிவை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

நடிகை சாய்பல்லவிக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் என்றும் அதனால் தான் அவர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும்

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்-விஜய்: பிரபல இயக்குனர் திட்டம்!

 அஜித் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து நடிக்கவைக்க ஆசைப்படுவதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்கள்!

அஜித்தின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.