close
Choose your channels

சுசிந்திரன் அடுத்த படத்தில் இரண்டு தமிழ் ஹீரோக்கள்!

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’நான் மகான் அல்ல’ ’பாண்டிய நாடு’ ’ஜீவா’ ’பாயும் புலி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் தற்போது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் இரண்டு தமிழ் திரைப்பட ஹீரோக்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் ஜெய் மற்றும் நடிகர் ஆதி ஆகிய இருவர்தான் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இருவரும் தனித்தனியாக ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக இரண்டு ஹீரோக்களும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.