'ஜெய்பீம்' படத்தில் நடித்த குழந்தைக்கு டிசி வழங்கப்பட்டதா? பெற்றோர் விளக்கம்!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

’ஜெய்பீம்’ படத்தில் நடித்த சிறுமிக்கு பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் விளக்கம் அளித்துள்ளனர்.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் ராஜ்கண்ணு - செங்கனி மகளாக அல்லி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரம் ஒருவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த குழந்தையை டிசி வாங்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள குழந்தையின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும், பள்ளியில் உள்ள அனைவருமே குழந்தையை ஆதரிக்கின்றனர் என்றும், பள்ளி நிர்வாகம் டிசி வாங்க சொல்லி வற்புறுத்தியதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ படத்தில் மிக சிறப்பாக நடித்த குழந்தை நட்சத்திரத்திற்கு மேலும் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

More News

'அண்ணாத்த' பட வாய்ப்பு கிடைக்க அஜித் தான் காரணம்: இயக்குனர் சிவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததற்கு அஜித் தான் காரணம் என இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.

ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம்: பெண் டிக்டாக் பிரபலம் கைது!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வைரலாக்கிய பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாப் ஆங்கிளில் அஞ்சலி: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

'சர்கார்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'அண்ணாத்த'?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படம் தளபதி விஜய்யின் 'சர்க்கார்' படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனை பேச விடாமல் பட்பட்டென்று பேசிய தாமரை-பாவனி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தாமரை மற்றும் பாவனி ஆகியோர் இடையே ஆவேசமான சண்டை வந்தது என்பதும் ஒருவருக்கொருவர் அடிப்பதற்காக கை ஓங்கும் அளவிற்கு அந்த சண்டை நீடித்தது என்பதையும் பார்த்தோம்.