ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு!!!

  • IndiaGlitz, [Thursday,November 26 2020]

 

உலகின் மிகப்பெரிய சினிமா விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாகப் போட்டியிடப் போகும் திரைப்படத்தைக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் ஜல்லிக்கட்டு என்ற மலையாளத் திரைப்படம் போட்டியிடப் போகிறது.

இந்தப் படத்தை லிஜோ பெல்லிச்சேரி என்பவர் இயக்கி இருக்கிறார். இதில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சர்வதேச அளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருப்பது மலையாளத் திரை உலகினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிதும் பாராட்டை பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் என்ற இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இறுதிப் பட்டியலில் இந்தப் படம் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே ராக்கெட்டில் 60 செயற்கைக்கோள்… விண்வெளியில் புது புரட்சி!!!

ஒரு காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது பெரும் மலைப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்யா,

நிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்!!!

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் 500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்…பரபரப்பு சம்பவம்!!!

தூத்துக்குடி பகுதி அருகே நடுக்கடலில் வந்த ஒரு படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றம்? ஒட்டுமொத்த எவிக்சனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு அனைத்து போட்டியாளர்களும்

ஷிவானி கூட நிக்க வச்சு கேள்வி கேட்குறாங்கப்பா: பைத்தியம் பிடிக்கும் நிலையில் ரியோ!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒரு போட்டியாளரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு டார்கெட் செய்வது அதிகமாகி வருகிறது, முதலில் ஆரியை ஒட்டுமொத்த போட்டியாளர்களும்