பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: ஜூலி வெளியேற்றப்படுகிறாரா?

  • IndiaGlitz, [Thursday,July 27 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்களாக ஓவியா, ஆரவ், ரைசா ஆகியோர் தேர்வு பெற்றிருந்தபோதிலும், இந்த வாரம் யாரும் எலிமினேட் கிடையாது என்று பிக்பாஸ் நேயர்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், 'பிக்பாஸ் வீட்டில் யார் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றீர்களோ அவரை ஒருமனதாக தேர்ந்தெடுங்கள் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதன் பின்னர் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இதுகுறித்து டிஸ்கஸ் செய்கின்றனர். காயத்ரி இதுகுறித்து ஆரவ்விடம் கூறியபோது, 'ஓவியா தற்போது நல்லபடியாக மாறி வருகிறார், ஆனால் சக்தியும் ஜூலியும் எதிர்ப்பதமாக மாறி வருகிறார்கள் என்று கூறுகிறார். அதேபோல் ரைசாவும் ஜூலியும் ஒருபக்கமும், இன்னொரு பக்கம் சினேகனும், கணேஷூம் ஆலோசிக்கின்றனர்.
கடைசியில் முடிவை காயத்ரி அறிவிக்கின்றார். காயத்ரி இதுகுறித்து கூறியபோது, 'இதுவரைக்கும் நடந்த விஷயங்களிலும், இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களிலும் சரி, ஓரளவுக்கு அனைவரும் ஒத்து போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே ஜூலிதான் வெளியேற்றப்பட வேண்டிய நபர்' என்று கூறுகிறார். இதனையடுத்து ஜூலி கன்பெஃக்ஷன் அறைக்கு செல்வதோடு இன்றைய புரமோ வீடியோ முடிந்துள்ளது.
இந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்பட மாட்டார்கள் என்று அனைவரும் நினைத்த நிலையில் திடீர் திருப்பமாக ஜூலி இன்று வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சின்னக்குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பாடிய, ஆறு தேசிய விருதுகளும் ஏழு பிலிம்பேர் விருதுகளும் பெற்ற சின்னக்குயில் சித்ரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்: ஊடகங்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இழந்த தன்னுடைய புகழை மீண்டும் மீட்க அவர் 'கெட்டவன்' படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், 'பில்லா 3' படத்தை தயாரித்து இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளிவந்தன...

நமிதாவின் 'பாதி உண்மை'யில் முழு உண்மை இருக்கின்றதா?

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நமீதா தற்போதுதான் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்...

நேற்று ராஜினாமா: இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்பு

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதை பார்த்தோம்...

ஆரவ்வை தொவைச்சு காயப் போட்ருவேன்: ஜூலியின் ஆத்திரம் ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக கிட்டத்தட்ட செயல்பட்டு வரும் ஜூலி, யாரையாவது குற்றம் சொல்லி கொண்டிருப்பதையே பிழைப்பாக கொண்டு வருகிறார்...