திடீர் ஓய்வை அறிவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டிசன்(31) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இவர் ஐபிஎல் 2020 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடத் தொடங்கிய ஜேம்ஸ் பாட்டிசன் இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்ட இவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 4 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிற்காக களமிறங்கியுள்ளார்.

இறுதியாக சிட்னியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து காயம் காரணமாக உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாடாமல் இருந்தார். இதனால் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் இவரது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இனி பங்குபெற போவதில்லை என்று ஜேம்ஸ் பாட்டிசன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2013 ஆம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 2020 ஆம் ஆண்டு இலங்கை வீரர் மலிங்காவின் ஒய்வை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தார். பின்பு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தனது ஓய்வு குறித்துபேசிய ஜேம்ஸ் பாட்டிசன் “தான் 100% உடற்தகுதியுடன் இல்லை என்றும் இதனால் அணிக்கு முழுமையான பங்களிப்பை செலுத்த முடியாது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என்னால் சரியாக செயல்பட முடியவில்லை. இன்னும் 3 அல்லது 4 வருடங்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியும். எனவே உள்ளூர் மற்றும் விக்டோரியா போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன். மேலும் பல இளம் வீரர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன்“ என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் பாட்டிசன் ஓய்வை குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அவரது ரசிகர்கள் வருத்தம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

டி20  இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? கசிந்த ரகசியம்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கியுள்ளது.

லேட்டஸ்ட் அவுட் ஃபிட்டில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிதி அகர்வால்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நிதி அகர்வால்.

விவாகரத்து விவகாரம்: சமந்தா பதிவு செய்த அவதூறு வழக்கால் பரபரப்பு!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து தமிழ் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அபிஷேக்கை கொளுத்தி போட்ட அண்ணாச்சி: டென்ஷன் ஆன சிபி!

அபிஷேக்கை கொளுத்திப் போடும் நபர் என அண்ணாச்சி கூறியதை அடுத்து சிபி டென்ஷனான காட்சிகளின் வீடியோ இன்றைய முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே வழங்குவது எப்போது? தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பதும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்