சசிகலா தியாகி, ஓபிஎஸ் துரோகியா? விஜயசாந்திக்கு கடும் கண்டனம்

  • IndiaGlitz, [Monday,February 20 2017]
தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக கேலிக்கூத்து அனைவரும் அறிந்ததே. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் நடந்த ஜனநாயக கொலையை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ தயாராக இல்லை. மக்களின் கருத்துக்களுக்கு எதிராக வாக்களித்த 122 எம்.எல்.ஏக்களின் நிலைமை என்ன என்பதை இனிதான் பார்க்க வேண்டும்
இந்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவதை போல மக்களின் உணர்ச்சியை மேலும் தூண்டும் வகையில் நடிகையும் தெலுங்கானா மாநில அரசியல்வாதியுமான விஜயசாந்தி பேசியுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்துள்ளதாகவும், 122 எம்.எல்.ஏக்களையும் ஓபிஎஸ் போன்ற தீய சக்தியில் இருந்து சசிகலா காப்பாற்றியதாகவும், அவர் செய்த தியாகத்தால்தான் இன்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மலர்ந்துள்ளதாகவும், சசிகலாவின் சபதம் நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜயசாந்தியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதுகுறித்து கூறியபோது, 'விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை!' என்று கூறியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் மட்டுமின்றி பெரும்பாலானோர் விஜயசாந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜயசாந்தி பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தனிக்கட்சி தொடங்கி, அந்த கட்சியையும் தெலுங்கானா ராஷ்டிர கட்சியில் இணைத்து, அதன்பின்னர் முதலமைச்சர் பதவி ஆசை காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவியவர். பதவிக்காக பச்சோந்தி போல் கட்சி விட்டு கட்சி மாறும் விஜயசாந்தி, 1977ஆம் ஆண்டில் இருந்து ஒரே கட்சியில் பணியாற்றி வரும் ஓபிஎஸ் அவர்களை பார்த்து துரோகி என்று கூறுவதா? என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜயசாந்தியின் பச்சோந்திதனத்தை தெலுங்கானா மக்கள் அறிந்துதான் அவரை படுதோல்வி அடைய செய்து படுகுழியில் தள்ளியுள்ளனர். இப்போதைக்கு அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்ற நிலை தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் குப்பை கொட்ட முடியாத அவர் தமிழகம் குறித்து எந்த கவலையும் பட தேவையில்லை என்பதே தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. தமிழக மக்களுக்கான முதல்வராக வரவேண்டியவர் யார், தீய சக்தி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். தியாகம் செய்தது யார், துரோகம் செய்தது யார் என்பதை தமிழக மக்களுக்கு விஜயசாந்தி போன்ற பச்சோந்திகள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடந்த கருப்பு தினத்தை மக்கள் அடக்கவும் முடியாமல் கொந்தளிக்கவும் முடியாமல் உள்ளனர். அவர்களை விஜயசாந்தி போன்றோர் தூண்டிவிட்டால் மக்கள் சக்தி என்னும் எரிமலையில் பொசுங்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கல் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் உங்கள் தியாகத்தலைவியை வாழ்த்திக்கொள்ளுங்கள், போற்றி கொள்ளுங்கள், ஆனால் தயவுசெய்து ஊடகங்களில் பேட்டி அளிக்கும்போது மக்களின் மனதையும் புரிந்து கொண்டு கருத்தை தெரிவிக்க வேண்டும் என விஜயசாந்தி போன்றவர்களுக்கு கோரிக்கையாக வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.

More News

ஐபிஎல் வீரர்கள் ஏலம். ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்.

10வது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் எட்டு அணிகள் மோதுகின்றன.

மேலும் 500 மதுக்கடைகள் மூடல். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் உத்தரவு

தமிழக முதல்வராக கடந்த வாரம் பதவியேற்று சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சற்று முன்னர் தலைமைச்செயலகம் வந்தார்.

பாவனா விவகாரம்: கேரள முதல்வருக்கு நடிகர் விஷால் எழுதிய அவசர கடிதம்

நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது நடந்த அசம்பாவித சம்பவத்தால் கேரள திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

வரவேற்கப்படும் 11 . ஓடி ஒளியும் 122

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்றபோது பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ராகவா லாரன்ஸின் அன்புக்கோரிக்கை

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கோலிவுட்டில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.