ரூ.38 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண பில் அனுப்பிய மின்வாரிய துறை

  • IndiaGlitz, [Monday,August 14 2017]

மின்வாரிய கட்டணம் சில சமயம் திடீரென லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வந்து வீட்டின் உரிமையாளரின் மாரடைப்புக்கு காரணமாக அமையும், அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு ரூ.38 ஆயிரம் கோடி மின்கட்டண பில் வந்துள்ளது.

ஜாம்ஷெட்பூரில் வசித்து வரும் பி.ஆர். குஹா என்பவரது வீட்டில் மின்கட்டணம் கட்டவில்லை என்று கூறி மின் இணைப்பை துண்டித்துவிட்டனர். அதன்பின்னர் குஹா மின்சார அலுவலகம் சென்று மின்கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது மின்வாரிய அதிகாரிகள் அளித்த பதில் அதிர்ச்சியை ஊட்டியது. அவர்கள் கூறிய கட்டணம் ரூ.38 ஆயிரம் கோடி.

இதுகுறித்து குஹா மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியபோது, 'மூன்று அறைகள் கொண்ட வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களது வீட்டில் 3 மின்விசிறிகள் இருக்கின்றன. அவற்றுடன் மின் விளக்குகள் மற்றும் டி.வி. ஒன்றும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய தொகை மின்சாரக் கட்டணமாக வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில மின்சார வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து பேசிய குஹாவின் மகள் ரத்னா பிஸ்வாஸ், என் பெற்றோர்கள் இருவருமே உடல் நலமில்லாதவர்கள். மின்கட்டண ரசீது விவகாரத்தில் பக்கத்து வீட்டார் உதவி இருந்ததால்தான் புகார் அளிக்க முடிந்தது என்று வேதனையுடன் கூறினார்.

More News

ஆனந்த யாழை மீட்டிய அற்புத கவிஞர் நா.முத்துகுமார்

தமிழ் திரையுலகில் ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்த ஒரு கவிஞர் திடீரென தனது பயணத்தை முடித்து கொண்டது திரையுலகிற்கு மட்டுமின்றி ஒவ்வொரு ரசிகனுக்கும் மிகப்பெரிய இழப்பு...

முன்னாள் காதலியின் புகைப்படங்களை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் கைது

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது முன்னாள் காதலர் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார்...

'முடியாது' என்ற வார்த்தையே அஜித்திடம் இருந்து வந்ததில்லை. சிவா

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது...

தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம். நளினி சிதம்பரம் உறுதி

தமிழகத்தை சேர்ந்த மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு ஆளும் அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன...

விஐபி 2' படத்தின் 3 நாள் தமிழக வசூல் நிலவரம்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்று வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்...