close
Choose your channels

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளித்த பவன் கல்யாண் கட்சியினர்..!

Wednesday, May 14, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் நடித்த ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பாடல் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பாடலை நீக்க வேண்டும் என பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியினர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தானம் நடித்த ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் “ஸ்ரீனிவாச கோவிந்தா” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பாடல் ஒரு குத்தாட்டப் பாடலாக இருப்பதால், “குத்துப்பாட்டில் கடவுள் பெயரை சேர்ப்பதா?” என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

சந்தானம் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். "நான் கடவுளை நம்பும் ஒருவராக இருப்பதால், அவரை கிண்டல் செய்ய மாட்டேன்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருமலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது, அங்கு வந்த பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியினர் இந்து மதத்தை அவமதிக்கும் அந்த பாடலை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி இடத்தில் லேப்டாப் மூலம் அந்த பாடலைக் காண்பித்தனர். இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாக அவர் ஜன சேனா கட்சியினரிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment