ஜனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

கடந்த 90களில் ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ஜொலித்தவர் ஜனகராஜ் என்பது தெரிந்ததே. அவரது காமெடியும் பாடி லேங்வேஜூம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'தாதா 87' என்ற படத்தில் ஜனகராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் ஜனகராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். 'தர்ம அவதாரம்' என்ற டைட்டிலில் தயாராகும் படத்தில் ஜனகராஜ் புதிய அவதாரம் எடுக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'தாதா 87' படத்தை இயக்கும் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒரு மிடில் கிளாஸ் தந்தை கேரக்டரில் நடிக்கவுள்ள ஜனகராஜின் கேரக்டர், சமூகத்தில் நடக்கும் அவலங்களை கண்டு ஆத்திரப்படும் ஒரு கேரக்டர் என்றும், இந்த கேரக்டர் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்

வரும் மார்ச் மாதம் ஊட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், ஒரே ஷெட்யூலில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'தளபதி 62' படக்குழுவினர்களுக்கு போடப்பட்ட திடீர் நிபந்தனை

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இசைஞானியுடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடினார்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அப்பா-மகள் படத்தின் முழு விபரங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நெருங்கிய நண்பர் அருண்காமராஜ் இயக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றார் என்றும், இந்த படத்தின் பூஜையுடன் கூடிய முதல் நாள் படப்பிடிப்பு லால்குடியில் நடைபெற்றது

விவேக் குற்றச்சாட்டுக்கு ஒரு மணி நேரத்தில் பதிலளித்த விமான நிறுவனம்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது படங்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் சமுதாய சிந்தனைகளை தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே.

நெருங்கிய நண்பருக்காக சிவகார்த்திகேயன் செய்த அரிய செயல்

சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தாலும், கஷ்டப்பட்டபோது உடனிருந்த நண்பர்களை மறக்காமல் அவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.