close
Choose your channels

பிக்பாஸ் 2: ரூ.10 லட்சத்தை இழந்த ஜனனி

Sunday, September 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இறுதி போட்டியில் பங்கேற்ற ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வருக்கும் ஒரு ஆப்சன் கொடுக்கப்பட்டது. இதன்படி இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் தற்போது ரூ.10 லட்சத்தை பெற்றுவிட்டு வெளியேறிவிடலாம் என்பதுதான்

கடந்த சில நாட்களாக வருகை தந்த விருந்தினர்கள் ரித்விகாதான் வின்னர் என்று மறைமுகமாக கோடிட்டு காட்டியதால் ஆரம்பம் முதலே ரித்விகா இந்த ஆப்சனை ஏற்க தயாராக இல்லை. ஐஸ்வர்யா கொஞ்சம் முடிவெடுக்க திணறினாலும் இறுதியில் அவரும் இந்த ஆப்சனை பயன்படுத்தவில்லை.

ஜனனி குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் என்பதால் அவர் இந்த ரூ.10 லட்சத்தை பெற்று வெளியேறி இருக்கலாம் என ஆடியன்ஸ் கருதினாலும் ஜனனிக்கு தான் வெல்வோம் என்ற தன்னம்பிக்கை இருந்ததால் அவரும் இந்த ஆப்சனை பயன்படுத்தவில்லை. மொத்தத்தில் யாரும் இந்த ஆப்சனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்றைய இறுதிக்கட்டத்தில் ஜனனி வெளியேற்றப்பட்டார். ஜனனியின் வெளியேற்றம் கமல்ஹாசன், மும்தாஜ் உள்பட பலருக்கு அதிருதியை ஏற்படுத்தியது என்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.