ஒவ்வொரு நடிகரும் ஒருமுறையாவது பாலா படத்தில் நடிக்க வேண்டும் - ஜனனி ஐயர்

  • IndiaGlitz, [Saturday,April 09 2016]

பாலாவின் அவன் இவன்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல படங்களில் நடித்த நடிகை ஜனனி ஐயர், தற்போது உல்டா, மற்றும் தொல்லைக்காட்சி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'கோலிவுட்டில் உள்ள ஒவ்வொரு நடிகரும் நடிப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஒரே ஒரு முறையாவது பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் உல்டா படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் இந்த படத்தில் தனக்கு இரண்டு கேரக்டர் என்றும் கூறிய ஜனனி, தொல்லைக்காட்சி படத்தில் தனது கேரக்டரின் பெயர் மலர் என்றும் இந்த படம் முழுவதும் முதல்முறையாக பாவாடை தாவணி காஸ்ட்யூமில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 'பிரேமம்' படத்திற்கு பின்னர் மலர் என்ற பெயருக்கு ஒரு வசீகரம் இருப்பதால் இந்த கேரக்டரில் கூடுதல் கவனத்துடன் நடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய திருமணம் நிச்சயம் காதல் திருமணம்தான் என்றும் ஆனால் இப்போதைக்கு என்னுடைய கவனம் முழுவதும் நடிப்பில் இருப்பதாகவும் திருமணம் உரிய காலத்தில் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

More News

இன்று மாலை 'இறைவி' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கி முடித்துள்ள 'இறைவி' திரைப்படம் விரைவில் ரிலீஸ்....

குற்றப்பரம்பரை விவகாரம். பாரதிராஜாவுக்கு பாலா விளக்கம்

பாரதிராஜாவின் கனவு திரைப்படம் என்று கூறப்படும் 'குற்றப்பரம்பரை' படத்தின் பூஜை சமீபத்தில் உசிலம்பட்டி அருகே பிரமாண்டமாக நடைபெற்றது...

'தெறி'யின் மகளிர் மட்டும் சிறப்புக் காட்சி

இளையதளபதி விஜய்க்கு பெண் ரசிகைகள் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கல்லூரி மாணவிகளில் பலர் விஜய் ரசிகைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.....

ஒரே நேரத்தில் ரீமேக் ஆகும் 2 மணிரத்னம் படங்கள்

மணிரத்னம் இயக்கிய வெற்றி திரைப்படமான 'ஓகே கண்மணி' படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில்....

'கோ 2' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் சரத் இயக்கிய 'கோ 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக சற்று முன்னர்..