close
Choose your channels

ஸ்ரீதேவி மறைவுக்குக் பின் ஜான்வி கொண்டாடிய நெகிழ்ச்சியான பிறந்த நாள்

Wednesday, March 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாருமாகிய ஸ்ரீதேவியின் மறைவு மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம், ஆனால் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. குறிப்பாக அவருடைய இரண்டு மகள்களான ஜான்விகபூர், குஷிகபூர் ஆகியோர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லாமல் அவருடைய உறவினர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தனது தாயை இழந்த ஜான்விகபூர், தனது தாயின் வயதில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்கள் முன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த இல்லத்தில் இருந்த முதியோர்களின் வாழ்த்துக்கள், தனது தாயின் வாழ்த்தாகவே அவர் கருதியதாக கூறப்படுகிறது.

மேலும் முதன்முதலாக ஸ்ரீதேவியின் மறைவிற்கு பின் அவருடைய புன்சிரிப்பை பார்க்க முடிந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். முதியோர் இல்லத்தில் ஜான்விகபூர் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.