நான் உயிருடன் தான் இருக்கின்றேன்: ஜன்னல் கடை பஜ்ஜி கடைக்காரரின் அதிர்ச்சி பேட்டி

சென்னை மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் கடை பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனா தொற்றுக்கு பலியானதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இந்த நிலையில் ஜன்னல் கடை பஜ்ஜிக்கடை உரிமையாளர் தான் நலமாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு பலியானது தனது சகோதரர் என்றும் பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் அருகே அமைந்துள்ளது ஜன்னல் கடை பஜ்ஜிக்கடை. கடந்த பல ஆண்டுகளாக இந்த கடை அந்த பகுதியில் புகழ் பெற்றது. இந்த நிலையில் இந்த கடையின் உரிமையாளர் சிவராம கிருஷ்ணன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் உண்மையில் மறைந்த சிவராம கிருஷ்ணன் என்பவர் அந்த கடையின் உரிமையாளர் சந்திரசேகரன் என்பவரின் சகோதரர் என்றும், மறைந்த சிவராமகிருஷ்ணன் ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் ஓய்வு நேரத்தில் பஜ்ஜிக்கடையில் தனது சகோதரருக்கு உதவி செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் பலியானவர் சிவராம கிருஷ்ணன் என்றாலும் ஒருசில ஊடகங்களில் சந்திரசேகரன் புகைப்படம் வந்ததால் குழப்பத்திற்கு முடிவுகட்ட தற்போது சந்திரசேகரன் இதுகுறித்து மரணம் அடைந்தது தனது சகோதரர் என்று விளக்கமளித்துள்ளார். மேலும் தான் நலமாக இருப்பதாகவும், இருப்பினும் தனது சகோதரரின் மறைவு காரணமாக குடும்பமே சோகத்தில் இருப்பதால் இன்னும் ஒரு மாதம் கழித்தே கடை திறக்கப்படும் என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

More News

பாக்யராஜ், சாந்தனு இணையும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு!

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜின் மகன் சாந்தனு சமீபத்தில் தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே

நள்ளிரவில் கவர்ச்சி நடிகை வீட்டில் நடந்த சம்பவம்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் விக்கி என்பவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சொன்னா கேக்கனும்... முகக்கவசம் அணியாமல் வீறாப்பு காட்டிய அதிபருக்கு கொரோனா!!!

பிரேசில் அதிபர் போல்சோனோரோவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

நண்பன் என்றால் இப்படித்தான் இருக்கணும்: சிவகார்த்திகேயனை புகழ்ந்த நெல்லை துணை கமிஷனர்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகில் மிக குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ளார் என்பதும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு நடிகராக மாறி உள்ளார்

'சென்னை 28' கிளைமாக்ஸ்க்கு ஐடியா கொடுத்த பிரபல நடிகர்: வெங்கட்பிரபுவின் மலரும் நினைவுகள்

இயக்குனர் வெங்கட்பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படமான சென்னை-28 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு பிரபல நடிகர் ஒருவர் தான் ஐடியா கொடுத்ததாகக் கூறியுள்ளார்