close
Choose your channels

வேறு மாநில நடிகரை ஆட்சி செய்ய விடமாட்டோம்: ஜாக்குவார் தங்கம்

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணன் அபுபக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்" திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஜாக்குவார் தங்கம், ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய படம் இணையத்தில் லீக் ஆவதையே தடுக்க முடியவில்லை. இவர் எப்படி தமிழகத்தில் ஆட்சியை சரியாக செய்வார் என்று எனக்கு தெரியவில்லை. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் நினைத்தால் இதை தடுக்க முடியும். ஆனால் அவர்களும் தடுக்காமல் இருக்கின்றார்கள். ரஜினி அவர்களுக்கு பிரதமர் வரை செல்வாக்கு இருக்கிறது. அவர் நினைத்தால் பிரதமரிடம் நேரடியாக சொல்லி தமிழ் ராக்கர்ஸ்ஸை ஒரே நாளில் பிடித்து விடலாம். ஆனால் அதை ஏன் செய்ய மறுக்கிறார் என்றும் எனக்கு புரியவில்லை. ரஜினி மட்டுமன்றி கமல், அஜீத், விஜய், சூர்யா என எல்லோரும் இந்த விஷயத்தில் இணைந்து இணையத்தில் படங்கள் லீக் ஆவதை தடுத்து நிறுத்தி தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.

மேலும் தமிழ் படங்களில் மற்ற மாநிலங்களிலிருந்து வரும் நடிகர்களை நடிக்க வைக்க தாராளமாக அனுமதிப்போம். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தை ஆட்சி செய்ய வெளிமாநில நடிகர்களை அனுமதிக்க மாட்டோம். தமிழர்களை தமிழர் மட்டுமே ஆட்சி செய்யவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஜாகுவார் தங்கத்தின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.