close
Choose your channels

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு. அடைப்பை நீக்க அவசர சர்ஜரி

Monday, December 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் தேறி வந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் முதல்வரின் மாரடைப்பை சரிசெய்ய சற்று முன்னர் சிறு அளவில் சர்ஜரி ஒன்று செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சர்ஜரி முடிந்துவிட்டதாகவும், சர்ஜரியால் அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து அடுத்தகட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் அவர்களின் ஆலோசனையின்படியே சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.