புதுக்கட்சி தொடங்குகிறார் தீபா. தீபக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம். என்ன ஆச்சு தமிழ்நாட்டுக்கு?

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நானும் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து செயல்படுவோம் என்று கூறிய தீபா, திடீரென தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை எடுத்ததன் மர்மம் தெரியவில்லை. ஓபிஎஸ் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறியதாகவும், தங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியதாலும் தீபா தனிக்கட்சி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகனும், தீபாவின் சகோதரருமான தீபக், திடீரென அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் அளித்த பேட்டின் ஒன்றில், 'ஓபிஎஸ் அவர்களை அண்ணன் என அழைத்த தீபக், தினகரனை கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்றும் தீபாவுடன் தனக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் தீபக் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை முதல் ஓபிஎஸ் அவர்கள் மக்களை சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.

ஒரு பக்கம் ஓபிஎஸ் சுற்றுப்பயணம், இன்னொரு பக்கம் தீபாவின் புதுக்கட்சி, இதற்கிடையே தீபக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஆகியவை அடுத்தடுத்து நடந்துள்ளதால் மீண்டும் தமிழகம் 'பிரேக்கிங் நியூஸ்' காய்ச்சலில் மூழ்கியுள்ளது.

More News

தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி-இடம் அறிவிப்பு

தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 5ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது...

என்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை. கருணாஸ்

நகைச்சுவை நடிகர் கருணாஸ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தபோது கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தார்...

பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன். விஷால்

நடிகர் சங்க செயலாளரும், பிரபல நடிகருமான விஷால் தற்போது 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார். சிதம்பரம் மாவட்டம் பிச்சாவரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சிகிச்சையின்போது ஜெயலலிதா புகைப்படம் வெளியிடாதது ஏன்? அப்பல்லோ பதில் மனு தாக்கல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது...