close
Choose your channels

கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு நபருக்கும் விபத்து.

Saturday, April 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானதை சற்று முன்னர் பார்த்தோம்.

இந்த விபத்து திட்டமிடப்பட்ட கொலையா? அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா? என போலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில் இதே வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொருவரும் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் கேரளாவை சேர்ந்த சயான் என்பவரும் ஒருவர். இவர் சற்று முன்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொடநாடு கொலை வழக்கில் தேடப்படுபவர்கள் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.