close
Choose your channels

ஊட்டியில் ஜெயம் ரவி-லட்சுமி மேனன் படப்பிடிப்பு

Thursday, July 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'ரோமியோ ஜூலியட்' சமீபத்தில் 25வது நாளை பூர்த்தி செய்தது. 'பேராண்மை' படத்திற்கு பின்னர் சூப்பர் ஹிட் படமாக 'ரோமியோ ஜூலியட்' படம் அமைந்ததால் உற்சாகமாகியுள்ள ஜெயம் ரவி, அதே உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நேற்று முதல் தொடங்கியுள்ளார்.

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி செளந்திரராஜனின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் முதன்முதலாக ஜெயம் ரவிக்கு, லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கவுள்ளார். மைக்கேல் ராயப்பன் பிரமாண்டமான தயாரிக்கும் இந்த த்ரில் படத்தில் காளி வெங்கட் உள்பட வேறு சில நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

நேற்று முதல் ஊட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இவ்வருட இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'தனி ஒருவன் மற்றும் அப்பாடக்கர்' ஆகிய இரண்டு படங்களும் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.