close
Choose your channels

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா: இயக்குனர் யார் தெரியுமா?

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியான ’தனி ஒருவன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி நடிப்பில் அகமது இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ’ஜனகணமன’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் என்றும் இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு செல்ல முடியாத நிலையில் இந்த படத்தின் திரைக்கதை முழுவதையும் இயக்குனர் அகமது தற்போது முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும் ஒரு காதல் கதையும் இணைந்து செல்கிறது என்றும் எனவே இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இயக்குனர் அகமது தெரிவித்துள்ளார்.

’தனி ஒருவன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆன நிலையில் இந்த படத்தில் அதைவிட மிகவும் சிறப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.