கேன்ஸ் படவிழாவில் 'சங்கமித்ரா'வின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

  • IndiaGlitz, [Thursday,May 18 2017]

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றான 'சங்கமித்ரா' படம், 'பாகுபலி' படத்தை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சரித்திர படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரான்ஸ் நாட்டில் தொடங்கிய கேன்ஸ் படவிழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு பின்னர் உலகமே தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்த்துள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை கேன்ஸ் படவிழாவில் வெளியிட்டது, உலக வியாபார மார்க்கெட்டை எளிதில் ஈர்க்கும் ஒரு புத்திசாலித்தனமான புரமோஷன் என்றே கருதப்படுகிறது.

ஒரு கையில் வாளும் இன்னொரு கையில் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்து கொண்டு கம்பீரமாக ஸ்ருதிஹாசன் குதிரையின் மேல் உட்கார்ந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் ஸ்டில், படத்தின் பிரமாண்டத்தை ஆச்சரியத்துடன் வெளிப்படுத்துகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

More News

ரஜினி-ரஞ்சித் படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் 'ரஜினி 161' படத்தின் நாயகி ஹூமா குரேஷ் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்-ஜெயம்ரவி படங்களின் மேஜிக் ஒற்றுமை

அட்லி இயக்கத்தில் இளைதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும், அவற்றில் ஒன்று மேஜிக்மேன் வேடம் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சரியா? கனிமொழி எம்.பி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசியபோது, 'என் வாழ்க்கை ஆண்டவன் கையில் தான் உள்ளது. இன்று என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார்.

சச்சின் படத்தில் மதன் கார்க்கி பாடல்கள்

கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 'தோனி' படம் போலவே இந்த படமும் உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

திகார் சிறையில் தினகரனை சந்தித்த அதிமுக பிரமுகர்கள்

இரட்டை இலை சின்னத்தை சட்டவிரோதமாக கைப்பற்ற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகார் காரணமாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது...