நீங்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு இருக்கும்: 'PS 2' குறித்து ஜெயம் ரவி..!

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

நேற்று நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அருள்மொழி சோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி பேசியதாவது:

இங்கு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் வந்து இருக்கின்றீர்கள், அதனால் தனித்தனியாக உங்களுக்கு வணக்கம் சொல்வதை விட நான் ’பொன்னின் செல்வன்’ ரசிகர்களுக்கு எனது வணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன். மேலும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வந்த போது நீண்ட நாட்களாக திரையரங்குகளுக்கு வராத ரசிகர்கள் வந்திருந்தார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் வைத்துக்கொண்டும், உதவிக்கு ஆட்களை கூட்டிக் கொண்டும் இந்த படத்தை பார்க்க வயதானவர்கள் வந்ததை பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது சாதாரணமாக நடக்க கூடிய ஒரு நிகழ்வு அல்ல, பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதியவருக்கு கிடைத்த வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். அவ்வாறு திரையரங்குக்கு வந்து படம் பார்த்த எல்லோருக்கும் எங்கள் குழுவின் சார்பாக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்களோ, அதைவிட இரண்டு மடங்காக இருக்கும், கண்டிப்பாக உங்களை திருப்திபடுத்துவோம் என்பதை உறுதி செய்து கொள்கிறேன். உங்களை மாதிரி நாங்களும் இந்த படத்தை திரையில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றோம்

’பொன்னியின் செல்வன்’ என்ற ஒரு நடக்க முடியாத விஷயத்தை மணிரத்னம் அவர்கள் நடத்தி காண்பித்தார். அது மட்டும் இன்றி உலகத்திலேயே இரண்டு பாகத்தை எடுத்து முடித்துவிட்டு முதல் பாகத்தை பார்த்து விட்டு அதன் பிறகு இரண்டாம் பாகத்தை பாருங்கள் என்று சொன்ன ஒரே இயக்குனர் மணிரத்னம் தான் என்று நான் நினைக்கின்றேன்

ஐஸ்வர்யா ராய் அவர்களைப் பார்த்தாலே எனக்கு பேச்சு வராது, நான் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எல்லோருமே உங்களை விரும்புவார்கள், உங்கள் அன்பை விரும்புவார்கள். விக்ரம் அவர்கள் இந்த படத்திற்காக மிக அதிகமாக உழைத்து உள்ளார். அவருடைய உழைப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. கார்த்தி என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் இல்லை என்றால் இந்த படத்தில் இரண்டு பாகத்திலும் என்னால் நடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் எனக்கு சப்போர்ட் செய்தார்.

நானும் த்ரிஷாவும் நிறைய படங்கள் நடித்திருக்கிறோம், ஆனால் மணிரத்னம் அவர்கள் படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணி புரிந்தது என்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த படம் வெளி வந்தவுடன் உங்களுக்கு எப்படி பெயர் வருகிறது என்று மட்டும் பாருங்கள் என்று நான் த்ரிஷாவிடம் சொன்னேன். அது நடந்துவிட்டது’ என்று ஜெயம் ரவி தெரிவித்தார்.

More News

உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா? ஐஸ்வர்யா ராய் குறித்து சரத்குமாரிடம் பார்த்திபன் கேட்ட கேள்வி

உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா என 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா மேடையில் சரத்குமாரிடம் பார்த்திபன் கேட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

முதல் பாகத்தை விட பிரமாண்டம்.. ஐஸ்வர்யா ராயின் இன்னொரு அவதாரம்.. 'PS 2' டிரைலர்..!

மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி

ரிலீசுக்கு 2 நாள் இருக்கும் போது வெற்றிமாறன் செய்த கரெக்சன் ..! என்ன மாற்றம் தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'மருதநாயகம்' படத்தில் கமலுக்கு பதில் இந்த பிரபல நடிகரா? கைகொடுக்குமா மாஸ்டர் பிளான்..!

 கமல்ஹாசனின் கனவு படம் என்றால் அது 'மருதநாயகம்' தான் என்பதும் கடந்த 1997ம் ஆண்டு இந்த படத்தை எடுக்க அவர் முயற்சி செய்த நிலையில் பட்ஜெட் காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது

'ஏகே 62' படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த படமும் டிராப்?

அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' என்ற திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்