close
Choose your channels

ஒன்றல்ல, இரண்டு படங்களையும் முடித்துவிட்டேன்: ஜெயம் ரவி

Wednesday, August 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒன்றல்ல இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும் முடித்து விட்டேன் என ஜெயம்ரவி சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஜெயம் ரவி சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் ஒன்றல்ல இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டேன் என்று அவர் தெரிவித்திருப்பதால் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் அவர் முடித்து விட்டதாக தெரிகிறது.

மேலும் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்தது தனது ஆசிர்வாதம் என்றும் அவருடைய நகைச்சுவை, திறமை, இயற்கை மீது காட்டும் அன்பு ஆகியவை தன்னை கவர்ந்தது என்றும், அவருடன் மீண்டும் பணிபுரிய எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.