கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்களின் சென்னை வசூல் குறித்து பார்த்து வருகிறோம் அல்லவா. அந்த வகையில் இந்த வார சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

ஏற்கனவே சென்னையில் சூர்யாவின் 'சி3' வசூலில் சாதனை செய்து கொண்டிருப்பதை பார்த்தோம். தற்போது கடந்த வாரம் வெளியான 'ரம்' மற்றும் 'என்னோடு விளையாடு' படங்களின் சென்னை வசூல் குறித்து பார்ப்போம்

தனுஷின் 'விஐபி' புகழ் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி நடித்த 'ரம்' திரைப்படம் சென்னையில் 10 திரையரங்க வளாகங்களில் 75 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.12,52,420 வசூலாகியுள்ளது. அனிருத்தின் இசையில் உருவான இந்த படத்திற்கு 75% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர்.

இதேபோல் பரத் நடிப்பில் வெளியான 'என்னோடு விளையாடு' திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 11 திரையரங்க வளாகங்களில் 42 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.7,18,040 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் 60% மட்டுமே இருந்ததால் சராசரிக்க்கும் குறைவான படமாக கருதப்படுகிறது.

கடந்த 2ஆம் தேதி வெளியான ஜெயம் ரவி-அரவிந்தசாமியின் 'போகன்' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 10 திரையரங்க வளாகங்களில் 76 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.11,27,810 வசூல் செய்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 19 வரை ரூ.2,96,41,730 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் எளிமையை பார்த்து வியந்த நியூசிலாந்து நடிகை

இலங்கையை பூர்வீகமாக கொண்டு நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இளம்பெண் சஜா என்பவர் தற்போது கோலிவுட்டில் நாயகியாகியுள்ளார் தமிழ்ப் பெண்ணான இவர் கோலிவுட் குறித்தும், விஜய்யின் எளிமை மற்றும் விஜய்சேதுபதியின் கடின உழைப்பு ஆகியவை குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

சென்னை பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து முதலிடத்தில் சூர்யாவின் 'சி3'

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் கடந்த வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

'டிடி' நடிப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்த தனுஷ்

பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி என்ற திவ்யதர்ஷினி தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தோனியின் திடீர் விலகல் முடிவு. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தல தோனி, தற்போது திடீரென ஐபிஎல் போட்டி தொடரில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவாஜி புரடொக்ஷன்ஸ் அடுத்த தயாரிப்பில் விஜய், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ்?

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகிய சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' என்ற சூப்பர்ர் ஹிட் படத்தையும், அதன் பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த 'அசல்' ஆகிய படங்களை தயாரித்தது.