ஐலேண்ட் கேர்ள்: மாலத்தீவில் இருந்து ஜான்வி கபூர் பதிவு செய்த அடுத்த போட்டோ!

கடந்த சில நாட்களாக திரையுலகில் பிரபலமாக உள்ள நடிகைகள் மாலத்தீவு நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் அந்நாட்டின் சுற்றுலாத் துறை நடிகைகளுக்கு இலவசமாக அழைப்பு விடுத்து விமான செலவு, தங்கும் வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர் என்பதும் அவர்களது புகைப்படங்கள் இன்ஸ்டாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் 10 மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தோழிகளுடன் மாலத்தீவு சென்றார் என்பதையும் அங்கிருந்து கொண்டே அவர் பிகினி உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாவில் ‘ஐலேண்ட் கேர்ள்’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கிளாமர் உடையில் கிளாமர் லுக்கில் இருக்கும் அவரது இந்த புகைப்படம் கிட்டத்தட்ட 9 லட்சம் லைக்ஸ்களை பெற்று உள்ளது என்பதும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜான்வி கபூர் தற்போது ‘ரூஹி’, ‘தோஸ்தானா மற்றும் குட்லக் ஜெர்ரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிகினிக்கு அடுத்த லெவலில் போஸ் கொடுத்த 50 வயது நடிகை: 24 காரட் கோல்ட் என கமெண்ட்ஸ்!

நடிகை, எழுத்தாளர், தொகுப்பாளினி என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் பத்மா லட்சுமி சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் அவர் தனது பிறந்தநாளை

விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்தாரா தனுஷ்? 'கர்ணன்' வசூல் சாதனை!

தமிழகத்தின் மாஸ் நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜீத் உள்ளார்கள் என்பதும் இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்களது ரசிகர்கள் திருவிழா

ஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்து உள்ளார்.

மேற்வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு...!அநியாயமாக ஒருவர் பலி....!

மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கர்ப்பத்தின்போதே மீண்டும் கர்ப்பமான இளம்பெண்… அதிசயச் சம்பவம்!

ஒரு பெண் கருவுற்று இருக்கும்போதே மீண்டும் அப்பெண் கர்ப்பம் கொள்ள முடியும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ஒரு தகவல்.