ஜான்வி கபூரை தமிழுக்கு கொண்டு வருகிறாரா இந்த இயக்குனர்? பேச்சுவார்த்தை மும்முரம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய படங்களில் நடித்த தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் தமிழிலும் நடிப்பார் என்றும், தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் ஒருவர் தனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஜான்வி கபூர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘தடக்’ என்ற பாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகமான நிலையில் பல பாலிவுட் படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான ஜூனியர் என்டிஆர் நடித்த "தேவாரா" படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்தார். இதையடுத்து, தற்போது அவர் ராம்சரண் நடித்து வரும் "பெடி" என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், விரைவில் அவரை தமிழுக்கு கொண்டு வர சில இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இயக்குனர் பா.ரஞ்சித், தனது அடுத்த படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் ஜான்வி கபூர் தமிழில் அரிமுகமானால், கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக மாறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பா ரஞ்சித் படத்தில் ஜான்வி கபூர் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com