close
Choose your channels

எல்லோரும் 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்: பிரபல தமிழ் நடிகர்

Sunday, April 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் ஐந்தாம் தேதி அதாவது இன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி, டார்ச்லைட் போன்றவற்றை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலர் இன்று விளக்கேற்ற தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு பல திரைப்பட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மோகன்லால், நாகார்ஜூன் உட்பட பல நடிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்த வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவாவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

இந்த உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை துரத்தி அடிக்கவும், எல்லோருக்கும் நம்பிக்கை கொடுப்பதற்காகவும், எல்லோரும் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நம்மை அழைத்துள்ளார். ஜனதா கர்ஃபியூ அன்று டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் கைதட்டியவாறு, ஏப்ரல் ஐந்தாம் தேதி அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் எல்லோரும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றியோ அல்லது மெழுவர்த்தி ஏற்றியோ அல்லது செல்போன்களை ஒளிர செய்தோ, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் ஒற்றுமையை காட்டுவோம்’ என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.