close
Choose your channels

தனது குழந்தைகளுக்கு பெற்றோரை தேடும் அம்மா: ஏன்? 'சக்தீ' திரைப்படத்தின் வித்தியாசமான கதை!

Thursday, April 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக பெற்றோரை தேடும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட ‘சக்தீ’ என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ’சென்னை 600028’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் தயாரித்த ஜேகே சரவணா என்பவர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சக்தீ’. இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது 

இந்த படத்தின் நாயகி ஒரு தாய் என்பதும் அவர் தனது 2 குழந்தைகளை வேறொரு பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதும் அவரது முயற்சி பலித்ததா? அவர் ஏன் தன்னுடைய குழந்தைகளை வேறொரு பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த படத்தின் கதையை அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஜினி நாயுடு, அஸ்வினி நாயர், ஷாமிலி சந்த்ரு, ஸ்ரீநிதி ரங்கபிரசாத், சுதர்சன் ரங்கபிரசாத் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தீபன் இசையமைத்துள்ளார். சயத் இப்ராஹிம் சுல்தான் ஒளிப்பதிவில் ஜேகே சரவணா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தினை காண - இங்கே கிளிக் செய்யவும் 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.