close
Choose your channels

குழந்தை பிறந்ததை வித்தியாசமாக அறிவித்த சிவகார்த்திகேயனின் ஜோடி!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பணிபுரிந்த தொகுப்பாளினி தனக்கு குழந்தை பிறந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணிபுரிந்தபோது ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பதும், அவருடன் தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகர் என்பவரும் இணைந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா, அதன்பின் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட ஐஸ்வர்யா சமீபத்தில் கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்து உள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் ’கல்கி அவதாரம் எடுத்து விட்டார்’ என வித்தியாசமாக குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.