ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா? வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இத்தகைய பாதிப்புகளை எதிர்க்கொள்ள அந்நாட்டின ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பால் அந்நாட்டின் வேலை இழப்பு தற்போது 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதனால் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் 20 ஆம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மென்மேலும் அதிகரித்து உயிரிழப்பும் தொடரும் நிலையில் இத்தகைய பாதிப்புகளை அதிரடியாக கையாள்வேன் என ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். இதனால் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு அந்நாட்டு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இத்திட்டத்திற்காக ஜோபிடன் பதவி ஏற்கவுள்ள அரசு 1.9 லட்சம் அமெரிக்க டாலர்களை செலவழிக்க இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு 138 லட்சத்து 811 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து உதவித்தொகை பெறும் ஒவ்வொரு அமெரிக்க குடிமகன்களுக்கும் 1,400 அமெரிக்க டாலர் உதவித்தொகை வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு ரூ.1 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் வேலையிழந்து உதவித் தொகை பெறும் நபர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 300 அமெரிக்க டாலர் தொகை (ரூ.21 ஆயிரம்) இனி 400 அமெரிக்க டாலராக (ரூ.29 ஆயிரம்) உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் வேலையிழந்த மக்கள் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

More News

இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன்: பிறந்த நாளில் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ஆரி தான் டைட்டில் வின்னர்: எத்தனை லட்சம் வாக்குகள் லீடிங் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ஆரிதான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு இருக்கும்

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசி! முன்னுரிமை யாருக்கு?

இந்தியாவில் அவசர கால அடிப்படையில் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வருகிறது.

'மாஸ்டர்' பார்க்க வந்த ஏழைப்பெண்ணுக்கு திரையரங்கு ஊழியர் தந்த இன்ப அதிர்ச்சி: வைரல் வீடியோ

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் பார்க்க வந்த வயதான ஏழை பெண் ஒருவருக்கு திரையரங்கு ஊழியர் கொடுத்த இன்ப அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது 

நடிப்பு நாயகன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் பிரபல நடிகர் ஆவது என்பது மிக அரிதாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் திரைப்படத் துறைக்கு சம்பந்தமே இல்லாத பின்னணியில் இருந்து